Site icon Tamil News

சிங்கப்பூரில் தனது வளர்ப்பு மகளுக்கு தந்தை செய்த கொடூரம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சிங்கப்பூரில் தனது வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்த தொடர்பில் அதிர்ச்சி செயதி வெளியாகியுள்ளது.

அதற்கமைய, தந்தைக்கு 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு சிறுமியுடன் இருந்த பெண்ணை இந்தோனேசியாவின் பாத்தாம் நகரில் நபர் திருமணம் செய்துக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து, கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது குடும்பத்துடன், அந்த நபர் சிங்கப்பூரில் குடியேறினார்.

2017ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் திகதி அன்று சிறுமியின் தாயாருக்கு வழக்கு ஒன்றில் 14 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, சிறைக்கு செல்லும் முன், தனது கணவரிடம் நமது மகளை நன்றாகப் பார்த்துக் கொள்ளும்படி கூறியுள்ளார்.

இந்த நிலையில், தனது வளர்ப்பு மகளை 10 வயது 13 வயது வரை அந்த நபர் பாலியல் துன்புறுத்தலையும், பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளார்.

இதனால் அந்த சிறுமிக்கு தற்கொலைக்கு செல்லும் எண்ணம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, பொலிஸார் வழக்குப்பதிவு செய்த நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையானது நடைபெற்று வந்தது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சிறுமியின் தந்தை தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டதால், அவருக்கு மீதான மூன்று குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளதால், 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளார். தற்போது 50 வயதாகும் அந்த நபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version