Site icon Tamil News

பிரான்ஸில் தொடர்ச்சியாக போராடும் விவசாயிகள் : உள்துறை அமைச்சர் பிறப்பித்த உத்தரவு!

பிரான்ஸில் விவசாயிகளின் போராட்டம் காரணமாக ஏறக்குறைய 15 ஆயிரம் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விவசாயிகள் பொலிஸாரின் அறிவுறுத்தல்களை மீறி சிவப்பு கோடுகளை தாண்டினால் காவல்துறையினரின் எச்சரிக்கைகளை புறக்கணிப்பதாக கருதப்படும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் அரசாங்கம் வழங்கிய சலுகைகளால் ஈர்க்கப்படாத விவசாயிகள் சங்கங்கள், தங்கள் உறுப்பினர்களை மேம்படுத்தப்பட்ட ஊதியம், குறைவான சிவப்பு நாடா மற்றும் வெளிநாட்டுப் போட்டியிலிருந்து பாதுகாப்பிற்காக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் முக்கியமான இடங்களை சுற்றிவளைத்து வீதிகளை மறித்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் பிரான்ஸின் உள்துறை அமைச்சரான டார்மனின் மூலோபாய இடங்களை பாதுகாக்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். இதற்கிடையே போலிஸாரின் உத்தரவுகளை மீறி விவசாயிகள் சிவப்பு கோட்டை தாண்டினால் கலவரங்கள் வெடிக்கக்கூடும் என நிபுணர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

Exit mobile version