Site icon Tamil News

விபத்தில் உயிரிழந்த நான்கு நண்பர்களுக்கு குடும்பத்தினர் அஞ்சலி!

கார் விபத்து ஒன்றில் நான்கு நண்பர்கள் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் ஆண்ட்ரி டுடோரோவ், 18, லியுபென் கோகோவ், 20, நர்சிஸ் டிட்டியானு, 20, மற்றும் இயோன் டோமா, 20, ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை செல்டென்ஹாமுக்கு அருகிலுள்ள உலென்வுட்டில் A436 இல் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

அவர்கள் பயணித்த கறுப்பு நிற ரெனால்ட் கிளியோ, சாலையை விட்டு விலகி மரத்தில் மோதி இடம்பெறுள்ளது.

கோகோவ், டிட்டியானு மற்றும் டோமா ஆகியோர் குளோசெஸ்டரில் ஒன்றாக வாழ்ந்ததாகவும், டுடோரோவ் விடுமுறையில் அவர்களைச் சந்திக்கச் சென்றதாகவும் குளோசெஸ்டர்ஷைர் போலீசார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நான்கு நண்பர்களுக்கும் குடும்பத்தினர் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

விபத்து குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் அல்லது டேஷ்கேம் காட்சிகள் இருந்தால், காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Exit mobile version