Site icon Tamil News

பிரான்சில் போலி வெடிகுண்டு அச்சுறுத்தல்: விசாரணைகள் தீவிரம்

பாடசாலைகள், சுற்றுலாத்தலங்கள், விமான நிலையங்கள் மீது தொடர்ச்சியாக விடுக்கப்படும் போலி வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக தற்போது 22 விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“போலி வெடிகுண்டு அச்சுறுத்தல் தொடர்பாக தற்போது 22 விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை தொடர விடமாட்டோம்!” என நீதித்துறை அமைச்சர் Eric-Dupond-Moretti நேற்று தெரிவித்தார்.

‘குறிப்பாக சிறுவர்கள், எவ்வித பொறுப்புணர்வும் இன்றி விமான போக்குவரத்துக்களை தடைப்படுத்துகின்றனர். அது ஒரு மனநோயாக மாறியுள்ளது.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version