14 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க வேண்டும் என ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு அவுஸ்ரேலியாவில் உள்ள பெடரல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மெட்டா நிறுவனம் தொடர்பான நட்டஈட்டை அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் மூலம் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் சரியான அறிவு இல்லாமல் சேகரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் இந்த அப்ளிகேஷன் 271,000 முறை டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மெட்டாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் நுகர்வோர் ஆணையத்தால் தொடர்புடைய வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையிலேயே அவுஸ்ரேலிய பெடரல் நீதிமன்றம் மேற்படி உத்தரவு பிறப்பித்துள்ளது.