Site icon Tamil News

சிங்கப்பூரில் வெளிநாட்டவர் மாயம் – பொது மக்களிடம் விசேட கோரிக்கை

சிங்கப்பூரில் வெளிநாட்டு நபரை காணவில்லை என்று பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

67 வயதான அந்த சீன நாட்டவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த மே 20 ஆம் திகதி காலை 9.00 மணி முதல் அவரை காணவில்லை என பொலிஸார் கூறியுள்ளார்.

அவர் கடைசியாக சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் Blk 5ல் நோயாளி உடை அணிந்து இருந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.

அவர் பற்றி தெரிந்தால், 999க்கு அழைக்கும்படி பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கவும் அல்லது www.police.gov.sg/iwitness என்ற இணையதளத்தில் தகவலை சமர்ப்பிக்கவும்.

அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்று பொலிஸார் கூறியுள்ளனர்.

Exit mobile version