பங்களாதேஷின் முன்னாள் ஜவுளி மற்றும் சணல் அமைச்சர் கோலம் தஸ்தகிர் காசி கைது செய்யப்பட்டுள்ளார்.
76 வயதான தலைவர் தலைநகர் டாக்காவின் பியர்கோலி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கைது செய்யப்பட்டார் என்று பல்டான் காவல் நிலைய பொறுப்பதிகாரி மொல்லா முகமது காலித் ஹுசைன் தெரிவித்தார்.
டாக்கா பெருநகர காவல்துறை அவரைத் தடுத்து நிறுத்தி டிடெக்டிவ் பிராஞ்ச் (டிபி) அலுவலகத்திற்கு அழைத்து வந்ததாக செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், அவர் கைது செய்யப்பட்ட வழக்கு தொடர்பான எந்த விவரங்களையும் காவல்துறை அதிகாரி தெரிவிக்கவில்லை.
முன்னதாக, நாராயண்கஞ்சில் உள்ள ரூப்கஞ்ச் காவல் நிலையத்தில் ஹசீனா மற்றும் காசி உட்பட 105 நபர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.