Site icon Tamil News

சுவிட்ஸர்லாந்தில் கருணைக்கொலை செய்யப்பட்ட குதிரை

சுவிட்ஸர்லாந்தில் விபத்தில் சிக்கிய குதிரை  ஒன்று கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளது.

கன்டோன் ஆர்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 9:30  மணியளவில் குதிரை சவாரியின் போது பாரிய விபத்து ஏற்பட்டது. இதில் குதிரை மற்றும் இருவர் காயமடைந்தனர்.

இதன்போது, 53 வயதான பயிற்றுவிப்பாளர், 13 வயது சவாரி மாணவனுடன் நடந்து சென்றபோது, ​​குதிரை பள்ளத்தில் விழுந்தமையினால் விபத்து ஏற்பட்டுள்ளது. குதிரையும் இரண்டு பேரும் பள்ளத்தாக்கில் விழுந்து காயங்களுக்கு உள்ளாகினர்.

குதிரைக்க கடுமையான காயங்கள்  ஏற்பட்டமையால் கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்த நபர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version