Site icon Tamil News

முடிவுக்கு வரும் ரஷ்ய – உக்ரைன் போர்? : புட்டின் வெளியிட்ட செய்தி!

உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் வீரர்கள் ரஷ்யாவிற்குள் ஊடுருவி தாக்குதல்களை நடத்திய பின்னர் அவர் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.

கிரெம்ளின் போரின் ஆரம்பத்தில் இஸ்தான்புல்லில் கெய்வ் மற்றும் மாஸ்கோ இடையே மத்தியஸ்த பேச்சுவார்த்தைகளில் தோல்வியுற்ற ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய தயாராக இருப்பதாக அவர் அறிவித்துள்ளார்.

விளாடிவோஸ்டாக்கில் இடம்பெற்ற பொருளாதார மன்றத்தில் கருத்து வெளியிட்ட அவர், நாங்கள் ஒருபோதும் பேச்சுவார்த்தைக்கு மறுத்ததில்லை.

ஆனால் சில இடைக்கால கோரிக்கைகளின் அடிப்படையில் அல்ல. இஸ்தான்புல்லில் ஒப்புக் கொள்ளப்பட்ட மற்றும் உண்மையில் தொடங்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள தயார்” எனக் கூறியுள்ளார்.

Exit mobile version