Site icon Tamil News

வெளிநாடு ஒன்றில் இலங்கை தாதியர்களுக்கு தொழில்வாய்ப்பு!

சவுதி அரேபியாவில் இலங்கை தாதியர்களுக்கு வேலைவாய்ப்பு காத்திருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சவுதி அரேபியாவின் சுகாதார அமைச்சடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஊடக செயலாளர் சஞ்ஜய் நல்லப்பெரும தெரிவித்துள்ளார்.

இதன்படி இந்த ஆண்டில் நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கை தாதியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக  அவர் கூறியுள்ளார்.

ஆட்சேர்ப்பு நடவடிக்கையின் முதற்கட்டம் கொழும்பில் இடம்பெற்றதாகவும், எதிர்வரும் 12 மாதங்களில் ஆயிரம் தாதியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version