Site icon Tamil News

மெல்போர்னையும் சிங்கப்பூரையும் இணைக்கும் பாதையை இரத்து செய்யும் எமிரேட்ஸ் விமான நிறுவனம்!

மெல்போர்னையும் சிங்கப்பூரையும் இணைக்கும் பாதையை எமிரேட்ஸ் இரத்து செய்துள்ளது.

துபாயை தளமாகக் கொண்ட விமான நிறுவனத்தின் போயிங் 777 கள் 1996 முதல் இந்த வழித்தடத்தில் சேவை செய்து வருகின்றன.

இப்பகுதியூடாக பயணிப்பதற்கு ஏறக்குறைய 08 மணி நேரம் தேவைப்படுகிறது. இந்நிலையில் பயணத்திற்கான காலத்தை கருத்திக் கொண்டு இதனை இரத்து செய்ய தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

சிங்கப்பூர் போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையத்தின் (CCCS) இறுதி மதிப்பீட்டைப் பெற்ற பிறகு EK404/405 சிங்கப்பூர்-மெல்போர்ன் சேவையை நிறுத்தும் தேதியை எமிரேட்ஸ் தீர்மானிக்கும்’ என்று எமிரேட்ஸ் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

‘டெர்மினேட் தேதி முடிவடைந்ததும், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மாற்றங்களை எமிரேட்ஸ் தெரிவித்து அவர்களுக்கு மாற்று பயண ஏற்பாடுகளை வழங்கும் எனவும் இது தொடர்பில் வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version