Site icon Tamil News

கதிர்வீச்சு தாக்கத்தினால் ரஷ்யாவின் கபரோவ்ஸ்கில் அவசரநிலை பிரகடனம்

ரஷ்யாவின் கிழக்கு நகரமான கபரோவ்ஸ்கில் அதிகாரிகள் “கதிர்வீச்சு ஆதாரம்” கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் அவசரகால நிலையை அறிவித்துள்ளனர் என்று ரஷ்ய செய்தி நிறுவனமான TASS தெரிவித்துள்ளது.

குடியிருப்பு கட்டிடங்களில் இருந்து சுமார் 2.5கிமீ (1.5 மைல்) தொலைவில் உள்ள மின்கம்பத்திற்கு அருகில் உயர்ந்த கதிர்வீச்சு அளவுகள் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த இரண்டு நாட்களுக்கு கதிர்வீச்சு அளவுகள் கண்காணிக்கப்படும் என்றும், கதிர்வீச்சின் ஆதாரம் குறித்து ஆராயப்படும் என்றும், ஆனால் இதுவரை யாரும் காயமடையவில்லை அல்லது கதிர்வீச்சுக்கு ஆளாகவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version