Site icon Tamil News

பிரான்ஸில் வயோதிப பெண்ணுக்கு இளைஞனால் காத்திருந்த அதிர்ச்சி

பிரான்ஸில் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பரிஸ் 17 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 56 வயதுடைய பெண்ணே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

பாரிஸில் உள்ள வீடொன்றில் வைத்து இந்த பாலியல் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 56 வயதுடைய பெண் ஒருவர் மாலை வீடு திரும்பிய போது, வீட்டுக்குள் பதுங்கி மறைந்திருந்த இளைஞன் ஒருவன், குறித்த பெண் மீது பாய்ந்து அவரைத் தாக்கியுள்ளார்.

பின்னர் அவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். அதையடுத்து அப்பெண்ணின் தொலைபேசியை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

பின்னர் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்தனர். விசாரணைகளைத் தொடர்ந்து குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

Exit mobile version