Site icon Tamil News

இலங்கையில் யுக்திய நடவடிக்கையில் சிக்கிய வயோதிப பெண்

தடைசெய்யப்பட்ட மாத்திரைகளை விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யுக்திய நடவடிக்கைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் நேற்று (22) வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவில், இல. 31/B, புவத்கஹவத்தை, முதலாம் பிரதேசத்தில் இந்த சுற்றிவளைப்பை முன்னெடுத்தனர்.

இதன்போது மருத்துவ சீட்டு இன்றி 89 தடை செய்யப்பட்ட மாத்திரைகளை வைத்திருந்த 61 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக வெல்லம்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Exit mobile version