Tamil News

யாழில் திரையிடப்பட்ட ஈழத்தின் முதல் விண்வெளித்திரைப்படமான ‘புஷ்பக 27’

ஈழத்திலிருந்து , தயாரிக்கப்பட்ட தமிழரின் தொன்மையை தேடி செல்லும் முதல் விண்வெளித்திரைப்படமான “புஷ்பக 27” யாழ்ப்பாணத்தில் திரையங்கு நிறைந்த காட்சிகளாக மூன்று காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில், நேற்று முன்தினம் சனிக்கிழமை மற்றும் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களும் மூன்று காட்சிகள் சிறப்பு காட்சியாக இத்திரைப்படம் திரையிடப்பட்டது.

எதிர்வரும் காலங்களில் இலங்கையின் ஏனைய இடங்களில் உள்ள திரையரங்குகளிலும் , வெளிநாடுகளிலும் திரையிட நடவடிக்கை எடுத்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

சத்தியா மென்டிசின் திரைக்கதையில் , காரை சிவநேசனின் இயக்கத்தில் இத்திரைப்படம் உருவாக்கியுள்ளது.

Exit mobile version