கடனில் சிக்கியுள்ள இலங்கையின் பொருளாதார நிலைமைகள் முன்னேற்றமடைந்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது
கடனில் சிக்கித் தவிக்கும் இலங்கையின் பொருளாதார நிலை இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து படிப்படியாக முன்னேறத் தொடங்கியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
பணவீக்கம் 2022 ஆம் ஆண்டு உச்சமாக இருந்த 70 சதவீதத்திலிருந்து கடந்த மாதம் 5.9 சதவீதமாக குறைந்துள்ளது மற்றும் ஒன்றரை வருட நெருக்கடியை தொடர்ந்து கடந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் நாட்டின் பொருளாதாரம் விரிவடைந்தது என்று IMF வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இலங்கையின் வருடாந்த பொருளாதார விரிவாக்கம் 1.6 வீதமாகவும், நான்காம் காலாண்டில் 4.5 வீதமாகவும் இருந்ததாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியானது உணவு, மருந்து, எரிபொருள் மற்றும் மின்சாரம் போன்றவற்றின் கடுமையான தட்டுப்பாட்டால் இலங்கையர்களை துன்புறுத்தியது, கடுமையான எதிர்ப்புகளை ஈர்த்தது, இது அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அகற்ற வழிவகுத்தது.
இலங்கை 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 83 பில்லியன் டொலருக்கும் அதிகமான கடனுடன் திவாலாக அறிவித்தது. அதில் பாதிக்கும் மேற்பட்டவை வெளிநாட்டுக் கடனகளாகும்.
பொருளாதாரத்தை மீட்பதற்கான உதவிக்காக இலங்கை சர்வதேச நாணய நிதியத்தை நாடியது மற்றும் கடந்த ஆண்டு முதற்கட்ட உதவிகளை பெற்றது.
தற்போதைய நான்கு ஆண்டு பிணை எடுப்பு திட்டத்தின் கீழ், நாடு தேவையான பொருளாதார சீர்திருத்தங்களை சுமத்துகிறதா என்பது பற்றிய இரு வருட மதிப்பாய்வுகளுக்குப் பிறகு சர்வதேச நாணய நிதியம் 2.9பில்லியன் டொலரை தவணைகளாக வழங்க உள்ளது.