Site icon Tamil News

தாய்வானை மீண்டும் உலுக்கிய நிலநடுக்கங்கள் – அச்சத்தில் மக்கள்

தாய்வானின் தலைநகரான தைப்பேயில் இன்று இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

முதலில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தைவானை உலுக்கியது. அரை மணி நேரத்திற்குப் பின்னர் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

முதல் நிலநடுக்கம் சுமார் 25 கிலோமீட்டர் ஆழத்திலும் இரண்டாவது நிலநடுக்கம் சுமார் 19 கிலோமீட்டர் ஆழத்திலும் ஏற்பட்டதாக தாய்வானின் வானிலை ஆய்வகம் தெரிவித்தது.

இதுவரை உயிருடற்சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

இம்மாதம் (3 ஏப்ரல்) ஹுவாலியென் நகரை 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியது. அதில் குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர்.

ஏப்ரல் 3ஆம் திகதியிலிருந்து இதுவரை தாய்வானில் 1,000க்கும் அதிகமான பின்னதிர்வுகள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

Exit mobile version