புதுடெல்லி: அரபிக்கடலில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் லட்சத்தீவு அருகே உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் இரவு 8.56 மணியளவில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
மாலைத்தீவில் இருந்து 216 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இரவு 8.26 மணியளவில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலைத்தீவில் 7 நகரங்கள் லேசான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டன.
இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானதால் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.