Site icon Tamil News

இந்தியாவில் இன்று அதிகாலை உணரப்பட்ட நிலநடுக்கம்

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் இன்று காலை இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, ரிக்டர் அளவுகோலில் 4.9 மற்றும் 4.8 என்ற அளவில் இரண்டு வலுவான நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நிலைமையை அதிகாரிகள் கண்காணித்து வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version