பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையிலான நிதஹாச ஜனதா சபாவ (NJS) ஐக்கிய மக்கள் சக்தியுடன் (SJB) கூட்டணி அமைக்கும் முடிவை அறிவித்துள்ளது.
இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சுதந்திர மக்கள் சபையின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை தோற்கடிக்கும் போராட்டம் தொடர்பில் சுதந்திர மக்கள் சபை, ஐக்கிய மக்கள் சக்தியுடன் நடத்திய கலந்துரையாடல் வெற்றியடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் பரந்த அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த எதிர்வரும் சில வாரங்களில் எதிர்க்கட்சிகளுடன் நேரடியாக இணைந்து செயற்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.