Site icon Tamil News

கங்கை ஆற்றில் சிக்கிய டொல்பின்… சமைத்து உண்டவரை கைது செய்த பொலிஸார்!

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் நசீர்பூர் கிராமத்தை சேர்ந்த ரஞ்சித் குமார், சஞ்சய், தீவன், பாபா ஆகியோர் கடந்த 22ம் திகதி கிராமத்திற்கு அருகே உள்ள கங்கை ஆற்றில் மீன்பிடிக்க சென்றனர்.

ஆற்றில் வலையை வீசி மீன்பிடித்துக்கொண்டிருந்த நிலையில் அவர்கள் வீசிய வலையில் டொல்பின் சிக்கியுள்ளது. இதையடுத்து, டொல்பினை பிடித்த 4 பேரும் அதை தங்கள் தோளில் சுமந்து கிராமத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

பின்னர் வீட்டில் வைத்து டால்பினை வெட்டி சமைத்து சாப்பிட்டுள்ளனர். ஆற்றில் பிடித்த டொல்பினை 4 பேரும் தங்கள் தோளில் சுமந்து செல்வதை அதே கிராமத்தை சேர்ந்த சிலர் வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

இந்த வீடியோ வைரலான நிலையில் டால்பினை வேட்டையாடுவது சட்டப்படி குற்றம் என்பதால் இது குறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட வனத்துறையினர், டொல்பினை வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட ரஞ்சித் குமாரை கைது செய்தனர். எஞ்சிய 3 பேர் தலைமறைவான நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Exit mobile version