Site icon Tamil News

இலங்கை : வைத்தியர் அர்ச்சுனா பிணையில் செல்ல அனுமதி!

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா நீதிமன்றினால் சரீரப் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்ப்பானது இன்று மன்னார் நீதவான் நீதிமன்றினால் வழங்கப்பட்டுள்ளது.

மன்னார் வைத்தியசாலைக்குள் கடந்த வெள்ளிக்கிழமை (02) இரவு அத்துமீறி நுழைந்து கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தத நிலையில் கடந்த சனிக்கிழமை அவர் கைது செய்யப்பட்டார்.

கடமையிலிருந்த வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை பணியாளர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வைத்தியசாலை நிர்வாகம் அவருக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தது.

Exit mobile version