Tamil News

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் பெண் யார் தெரியுமா?

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மீடியா மற்றும் தொலைக்காட்சி நிறுவனமாக இருக்கும் சன் டிவி நெட்வொர்க்-ன் நிறுவனர் மற்றும் உயர்மட்ட நிர்வாக அதிகாரியாக இருக்கும் கலாநிதி மாறன் மற்றும் அவருடைய மனைவி காவேரி கலாநிதி ஆகியோர் ஒவ்வொரு வருடமும் ஒரே அளவிலான சம்பளத்தை பெற்று வருகின்றனர்.

இப்படி 2012 ஆம் நிதியாண்டில் கலாநிதி மாறன் 57 கோடி ரூபாயை சம்பளமாக பெற்ற நிலையில் காவேரி கலாநிதி-யும் 57 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றார்.

இதேபோல் 2021 ஆம் நிதியாண்டில் 87.50 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளனர்.

இதன் மூலம் 2012 முதல் 2021 வரையிலான காலக்தட்டத்தில் கணவன் – மனைவி ஜோடி சுமார் 1470 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளனர்.

இதன் மூலம் இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் பெண் உயர் அதிகாரியாக உள்ளார் காவேரி கலாநிதி. கடந்த 10 வருடத்தில் காவேரி கலாநிதி மாறன் சுமார் 735 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ள நிலையில் ஒரு மாதத்திற்கு சராசரியாக 6.1 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளார்.

சமீபத்தில் கலாநிதி மாறன் – காவேரி கலாநிதி மாறன் அவர்களின் மகள் காவ்யா-வும் சன் டிவி நெட்வொர்க் நிர்வாக பணிகளிலும், ஐபிஎல் போட்டிகளின் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் நிர்வாக பணிகளிலும் ஈடுப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version