Site icon Tamil News

9வது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறிய ஜோகோவிச்

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிச் சுற்றில் நம்பர் 2 வீரரான செர்பியாவின் ஜோகோவிச்சும், இத்தாலியின் ஜானிக் சின்னரும் மோதினர்.

இதில், ஜோகோவிச் 6-3, 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் நடப்பு சாம்பியனான அவர் விம்பிள்டன் டென்னிசில் 9-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

Exit mobile version