Tamil News

சிறப்பாக நடைபெற்ற மாவட்ட மட்ட தமிழ் மொழி தினம் – 2023

திருகோணமலை- மூதூர் வலய கல்விப் பணிப்பாளர் நளீம் (Z.M.M.Naleem) அவர்களின் வழிகாட்டல், ஆலோசனை மற்றும் ஒழுங்கமைப்புடன் சிறப்பாக கிளிவெட்டி மகா வித்தியாலத்தில் மாவட்ட மட்ட தமிழ் மொழி தினம் நடைபெற்றது

இதில் பிரதம விருந்தினராக மாகாணக் கல்விப் பணிப்பாளர் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் தனது சிறப்புரையில் இதனை விழாவாக ஒழுங்கமைத்தமைக்கு வலய கல்விப் பணிப்பாளர் மற்றும் கிளிவெட்டி மகா வித்தியாலத்தின் அதிபர் கோணேஸ்வரராசா (P.Koneswararasa) ஆகியோருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் திருகோணமலை வலயத்தின் வலய கல்விப் பணிப்பாளர் தி.ரவி அவர்களும் கிண்ணியா, திருகோணமலை, கந்தளாய் மற்றும் திருகோணமலை வடக்கு பிரதிக் கல்விப் பணிப்பாளர்களும் கலந்து சிறப்பித்தனர்

போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்குரிய சிற்றுண்டிகள். மதிய உணவு என்பன மூதூர் வலய சில பாடசாலை அதிபர்களினால் வழங்கப்பட்டதை நன்றியுடன் வலய கல்விப் பணிப்பாளரினால் நினைவு கூறப்பட்டது

 

 

Exit mobile version