Site icon Tamil News

மிச்சாங் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்கு உதவிய இயக்குனர் அமீர்

2002 ஆம் ஆண்டில் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக திரைப்படவுலகில் நுழைந்தவர் அமீர். பின்னர் ‘மௌனம் பேசியதே’, ‘ராம்’, ‘பருத்தி வீரன்’, ‘ஆதிபகவன்’ போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் அமீர் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்த இயக்குனர் அமீர், மிச்சாங் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

Exit mobile version