Site icon Tamil News

கென்யாவில் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஆர்ப்பாட்டங்களுக்கு தடை!

கென்யாவின் தலைநகரான நைரோபியில் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஆர்ப்பாட்டங்களைத் தடை செய்ய கென்யா காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குள் ஊடுருவி கலவரச் சூழலை உருவாக்குவதாகத் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறுகின்றனர்.

வரிகளை அதிகரிப்பதற்கு அரசாங்கம் கொண்டு வந்த பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாட்டில் உள்ள இளைஞர்கள் போராட்டங்களை ஆரம்பித்தனர், இதன் போது இதுவரை சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த திட்டம் ஜனாதிபதி வில்லியம் ரூட்டோவால் வாபஸ் பெறப்பட்டது, அவர் அமைச்சரவையின் பெரும் எண்ணிக்கையையும் நீக்கினார்.

ஆனால் போராட்டங்கள் தொடர்கின்றன

Exit mobile version