Site icon Tamil News

பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தும் ஒப்பந்தத்தை அங்கீகரிக்க வேண்டாம் எனக் கோரிக்கை!

ருவாண்டாவுடனான குடியேற்ற ஒப்பந்தத்தை அங்கீகரிக்க வேண்டாம் என்று கன்சர்வேடிவ் அரசாங்கத்தை பிரிட்டன் நாடாளுமன்றத்தின் மேலவை வலியுறுத்தியுள்ளது.

நாடு கடத்தும் திட்டத்திற்கு வழி வகுக்கும் உடன்படிக்கையை தாமதப்படுத்துவதற்கான வாக்கெடுப்பு ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸில் நடைபெற்றது. இதில் 214 கிற்கு 171 என வாக்களிக்கப்பட்டது.

ருவாண்டா பாதுகாப்பாக இருப்பதை அமைச்சர்கள் காண்பிக்கும் வரை, பாராளுமன்றம் ஒப்பந்தத்தை அங்கீகரிக்கக் கூடாது என்ற பிரேரணைக்கு,  லார்ட்ஸ் உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

முன்னாள் இராஜதந்திரி ஜான் கெர், ருவாண்டா திட்டம் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் “எங்கள் பொறுப்புகளுடன் பொருந்தாது” எனக் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் ருவாண்டா கொள்கையானது பிரான்சில் இருந்து ஆங்கிலக் கால்வாய் வழியாக U.K.க்கு அங்கீகரிக்கப்படாத குடியேற்றவாசிகளைக் கொண்டு வரும் “படகுகளை நிறுத்த” சுனக்கின் உறுதிமொழிக்கு முக்கியமானது.

அங்கீகரிக்கப்படாத புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்துவது ஆங்கிலக் கால்வாய் வழியாக ஆபத்தான பயணங்களைச் செய்வதிலிருந்து மக்களைத் தடுக்கும் என்று சுனக் வாதிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version