இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பதில், தாமதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லியில் இருந்து கப்பல் சேவையை ஆரம்பிக்க திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் வசதிகளை அதிகரிக்க இந்தியா இன்னும் சில நாட்கள் கோரிக்கை விடுத்துள்ளதால் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 29ஆம் திகதி இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இந்த பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.