Tamil News

குழந்தையை மார்போடு அணைத்த தீபிகா படுகோன்…. வைரலாகும் புகைப்படம்

பாலிவுட் நட்சத்திர ஜோடியான தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் தம்பதிக்கு செப்டம்பர் 8-ஆம் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்த நிலையில், தற்போது தீபிகா படுகோன் தன்னுடைய குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டிருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான ‘கல்கி AD 2898’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த தீபிகா படுகோன் சுமார் ஆறு வருடங்களுக்கு பின்னர் கர்ப்பமாக இருக்கும் தகவலை கடந்த ஆண்டு அறிவித்தார்.

அவ்வப்போது தன்னுடைய கர்ப்பகால புகைப்படங்களை வெளியிட்டு, இன்ப அதிர்ச்சி கொடுத்த தீபிகா படுகோனுக்கு செப்டம்பர் 8-ஆம் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்தது.

இதை தொடர்ந்து தீபிகா – ரன்வீர் ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்த நிலையில், தற்போது குழந்தையோடு தீபிகா படுகோன் உள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தன்னுடைய செல்ல மகளை மார்போடு அணைத்து கொண்டு… தீபிகா படுகோன் குழந்தையை ரசிக்கிறார்.

Exit mobile version