Tamil News

குழந்தையுடன் பங்களாவிற்கு சென்ற தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் ஜோடி

பாலிவுட்டில் முன்னணி நடிகையான நடிகை தீபிகா படுகோன் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர்.

ரன்வீர் சிங்கை காதல் திருமணம் செய்துக் கொண்ட இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய கர்ப்பத்தை அறிவித்திருந்தார். தொடர்ந்து கர்ப்பத்துடனேயே கல்கி 2898 ஏடி படத்தின் பிரமோஷன்களிலும் கலந்துக் கொண்டார்.

ரன்வீர் சிங்குடன் தன்னுடைய கர்ப்பகால போட்டோஷுட்டை எடுத்து அதன் புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார் தீபிகா படுகோன்.

இந்நிலையில் கடந்த 8ம் தேதி இவர்களுக்கு அழகான பெண்குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் தீபிகா படுகோன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய குழந்தையுடன் அலிபாக்கில் புதிதாக வாங்கியுள்ள பங்களாவிற்கு இந்த ஜோடி சென்றுள்ளது.

முன்னதாக ரன்வீர் சிங்கின் அப்பா, அம்மா மற்றும் சகோதரி என அனைவரும் தீபிகாவை மருத்துவமனையில் சென்று பார்த்துள்ளார். முன்னதாக நடிகர் ஷாருக்கான், தொழிலதிபர் முகேஷ் அம்பானி உள்ளிட்டவர்களும் மருத்துவமனைக்கு சென்று தீபிகா படுகோனை நலம் விசாரித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது 22 கோடி ரூபாய்க்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வாங்கியுள்ள அலிபாக் பங்களாவிற்கு இந்த ஜோடி சென்றுள்ளது. இந்த பகுதியில் அமிதாப் பச்சன் , விராட் கோலி உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் பலரும் வீடுகளை வாங்கியுள்ளனர்.

மிகவும் அமைதியான சூழ்நிலையில் இந்தப்பகுதி இருக்கும் நிலையில், தன்னுடைய குழந்தையுடன் அங்கு தீபிகா நேரத்தை செலவிட திட்டமிட்டுள்ளார்.

Exit mobile version