Site icon Tamil News

ஜப்பான் நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரிப்பு!

ஜப்பானில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளதாக  அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரே இரவில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் ஆரம்பத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை 30 ஆகக் காட்டியது.

உள்ளூர் அதிகாரிகளின் கூற்றுப்படி, சுசு நகரில் சுமார் 53 வீடுகள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் இது குறித்த மேலதிக சேதவிபரங்களை அதிகாரிகள் மதிப்பிட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்னதாக குறித்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version