நாளை (21) துக்க தினமாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் தொடர்பில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, அனைத்து அரச நிறுவனங்களிலும் நாளை தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன குறிப்பிட்டுள்ளார்.