Site icon Tamil News

பொரிஸ் ஜோன்சனின் வட்செப் தகவல்களை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்கு காலக்கெடு!

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் வாட்சப் தகவல்களை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவின்போது,  பொரிஸ் ஜோன்சனும் அவரது ஊழியர்களும் முடக்க நிலை விதிகளை மீறி பெருவிருந்தொன்றை பிரதமர் அலுவலகத்தில் நடாத்தினார்கள் என்ற குற்றச்சாட்டு தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விசாரணைகள் அவருடய வட்செப் தகவல்களை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்கு காலதாமதமாகியுள்ளது.

இதன்படி, வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி (வியாழக்கிழமை) அவர் குறித்த தகவல்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version