கொழும்பு துறைமுக நகரத்தில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து உலக முதலீட்டாளர்களுக்கு தெரியப்படுத்த பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற முதலீட்டு வாய்ப்பு வழங்கும் விழாவில் அவர் இது குறித்து தெளிவுப்படுத்தவுள்ளார்.
அதன்படி, கொழும்பு துறைமுக நகரத் திட்டத்துக்குள் உள்ள முதலீட்டு வாய்ப்புகளை உலக முதலீட்டாளர்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்களை முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கில் இந்நிகழ்வை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதில் இலங்கையின் கொழும்பு துறைமுக நகர திட்டத்தின் பங்கு பற்றிய கண்காட்சியுடன் டேவிட் கேமரூன் ஒரு அமர்விலும் உரையாற்ற உள்ளார்.