Site icon Tamil News

ஐரோப்பிய நாடுகளில் இருந்து கொழும்புக்கு வந்த பொதிகளில் ஆபத்தான போதைப் பொருள்

மத்திய தபால் நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த பொதிகளில் ஏராளமான போதை மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இலங்கைக்கு அனுப்பப்பட்ட சந்தேகத்திற்கிடமான பல பொதிகளில் இந்த போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அங்கு 150 மாத்திரைகள், 466 கிராம் குஷ் மற்றும் 10 கிராம் கொக்கெய்ன் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.

அந்த மருந்துகளின் சந்தைப் பெறுமதி சுமார் 9 மில்லியன் ரூபா என சுங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த போதைப்பொருள் அடங்கிய பொதிகள் கனடா, இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து தெஹிவளை, வெள்ளவத்தை, வயங்கொடை மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களிடம் இருந்ததாக சுங்கப் பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.

எனினும் இவ்வாறு பதிவு செய்யப்பட்ட இலங்கையில் உள்ள முகவரிகள் போலியானவை என மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது

இலங்கை சுங்கப் பிரிவினரின் விசாரணையின் முடிவில், இந்த போதைப்பொருள் அடங்கிய பொதிகள் மேலதிக விசாரணைகளுக்காக இலங்கை காவல்துறையின் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளன.

Exit mobile version