Site icon Tamil News

பிரான்ஸை அச்சுறுத்திய ஆபத்தான நபர் – 2 வருடங்களின் பின்னர் கைது

பிரான்ஸில் மிக்பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த இரண்டு வருடமாக இடம்பெற்று வந்த விசாரணைகளை அடுத்து, இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நாடு முழுவதும் போதைப்பொருள் விநியோகம் செய்யும் மிக முக்கிய குற்றவாளியும், பெல்ஜியம், நெதர்லாந்து போன்ற நாடுகளில் இருந்து போதைப்பொருள் கடத்திக்கொண்டு வரும் குற்றவாளியுமான Mouez K எனும் நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் தொடர்பில் கடந்த இரண்டு ஆண்டுகள் மேற்கொண்டு வந்த விசாரணைகளை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பரிஸ் 17 ஆம் வட்டாரத்தில் வைத்து கடந்த நவம்பர் 17 ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டதாகவும், அவருடன் 300 கிலோ கஞ்சா போதைப்பொருளும், 75 கிலோ கொக்கைன் போதைப்பொருளும், AK47s துப்பாக்கிகளும், துப்பாக்கி குண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

Exit mobile version