இலங்கையில் இராணுவ விசேட அதிரடிப்படையில் கடமையாற்றிவிட்டு தப்பிச் சென்ற நபரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
இரகசியமாக கஞ்சா பண்ணை நடத்தி வந்ததே அதற்குக் காரணமாகும்.
அவர் திஸ்ஸமஹாராமவின் கொலனியா, பேரலிபொல பிரதேசத்தில் மிகப்பெரிய கஞசா பன்னையை நடத்தி வந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஹமுபாந்தோட்டை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.