Site icon Tamil News

ஆஸ்திரேலியாவுக்கு காத்திருக்கும் ஆபத்து – நாளை முதல் அமுலாகும் எச்சரிக்கை

குயின்ஸ்லாந்து மாநிலத்தின் பல பகுதிகளில் நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் தீ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

03 வருடங்களின் பின்னர் வசந்த காலத்தில் தீ எச்சரிக்கை விடுக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

தற்போதைய நிலவரப்படி, காட்டுத் தீ பரவத் தொடங்கினால், அதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கும் என குயின்ஸ்லாந்து பேரிடர் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

எனவே, எச்சரிக்கை அறிவிப்புகள் குறித்து தொடர்ந்து கவனம் செலுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

காட்டுத் தீ அபாயப் பகுதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேறுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version