Site icon Tamil News

தினமும் உடற்பயிற்சி செய்தால், 10 பேரில் ஒருவர் முன்கூட்டி இறப்பதை தடுக்கலாம்

தினமும் உடற்பயிற்சி செய்தால் பத்தில் ஒரு முன்கூட்டிய மரணத்தை தடுக்கலாம் என ஆய்வில் தகவல்.

பொதுவாகவே இன்று பெரும்பாலானோர் உடற்பயிற்சி செய்வதில்லை. ஆனால் அதிகாலை எழுந்து உடற்பயிற்சி செய்யும் பலர் மிகவும் ஆரோக்கியமாக தான் காணப்படுகின்றன. இந்த உடற்பயிற்சியின் நன்மைகளை பலர் அறிந்து கொள்வதில்லை.

அந்த வகையில் சர்வதேச ஆராய்ச்சியாளர்களின் குழு ஒன்று முப்பது மில்லியனுக்கும் அதிகமான மக்களை உள்ளடக்கிய 196 ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.

உடற்பயிற்சி

அதன்படி ஒவ்வொரு வாரத்திற்கும் குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான அல்லது தீவிரமான உடற்பயிற்சி செய்தால் ஆறில் ஒரு ஆரம்ப மரணம் தடுக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையால் பரிந்துரைக்கப்படுகிறது.

ஆனால் அதில் பாதி அளவு அதாவது வாரத்திற்கு 75 நிமிடங்கள் அல்லது ஒரு நாளைக்கு 11 நிமிடங்கள் குறைவாக உடற்பயிற்சி செய்தால் ஆரம்ப மரணம் தடுக்கப்படலாம் என பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசினில் வெளியிடப்பட்ட மெட்டா பகுப்பாய்வு தெரிவிக்கிறது.

ஆசிரியர் சோரன் பிரேஜ் கூற்று

பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உடல் செயல்பாடுகளின் தொற்றுநோயியல் நிபுணரும், ஆய்வின் இணை ஆசிரியருமான சோரன் பிரேஜ் கூறுகையில், ஒவ்வொரு நாளும் 10 நிமிடங்களுக்கு மேல் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

மேலும் இதுபோன்ற செயல்களைச் செய்ய நீங்கள் ஜிம்மிற்குச் செல்ல வேண்டியதில்லை, இது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். மக்கள் வேலைக்குச் செல்லும் வழியில் முந்தைய பேருந்து நிறுத்தத்தில் இறங்க முயற்சிக்கவும் அல்லது வீட்டிற்கு சைக்கிள் ஓட்டலாம் என தெரிவித்தார்.

மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற இருதய நோய்கள் 2019 ஆம் ஆண்டில் உலகளவில் 17.9 மில்லியன் மக்களைக் கொன்றது. அதே நேரத்தில் உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, புற்றுநோயானது அடுத்த ஆண்டில் கிட்டத்தட்ட 10 மில்லியன் இறப்புகளுக்குக் காரணமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version