Site icon Tamil News

வங்கக் கடலில் உருவாகும் சூறாவளி புயல்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மே 24 ஆம் தேதி காலை 5:30 மணி நிலவரப்படி 15.0°N மற்றும் 88.4°Eக்கு அருகில் மையம் கொண்டுள்ளது என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடகிழக்கு திசையில் நகர்ந்து, 25 மே 2024 சனிக்கிழமை காலை 5:30 மணிக்கு கிழக்கு-மத்திய வங்கக்கடலில் புயலாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அது பின்னர் வடக்கு நோக்கி நகர்ந்து, 25 மே 2024 சனிக்கிழமை இரவு 11:30 மணிக்கு கடுமையான சூறாவளி புயலாக மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது.

நாட்டின் கடற்பகுதிகளைச் சுற்றிலும், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவைச் சுற்றிலும் மிக வலுவான காற்று (மணிக்கு 60-70 கிமீ), அதிக மழைப்பொழிவு மற்றும் மிகவும் கொந்தளிப்பான கடல் எதிர்பார்க்கப்படுகிறது.

மீனவ மற்றும் கடற்படை சமூகங்கள் மறு அறிவித்தல் வரை இந்த கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

Exit mobile version