Site icon Tamil News

CWC – பாகிஸ்தான் அணிக்கு 345 ஓட்டங்களை நிர்ணயித்த இலங்கை

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தெலுங்கானாவின் ஐதராபாத்தில் 8-வது லீக் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, இலங்கை அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் குசால் பெராரா டக் அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா அரை சதமடித்து 51 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்து இறங்கிய குசால் மெண்டிஸ் அதிரடியாக ஆடி சதமடித்தார். அவர் 77 பந்துகளில் 6 சிக்சர், 14 பவுண்டரி உள்பட 122 ரன்கள் குவித்தார்.

அவரை தொடர்ந்து இறங்கிய சதீரா சமரவிக்ரம பொறுப்புடன் ஆடி சதமடித்து 108 ரன்னில் வெளியேறினார்.

இறுதியில், இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 344 ரன்களை குவித்தது.

பாகிஸ்தான் சார்பில் ஹசன் அலி 4 விக்கெட்டும், ஹரிஸ் ராப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 345 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்குகிறது.

 

Exit mobile version