Tamil News

யாழ்ப்பாணத்தில் இன்று விமர்சயாக கொண்டாடப்பட்ட பட்டிபொங்கல் நிகழ்வு

பட்டிப் பொங்கல் விழாவும் கோபவனியும் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இன்று பிற்பகல் (16) சத்திர சந்தியில் உள்ள ஞானவைரவர் ஆலயத்தில் வெகு சிறப்பாக இந்த விழா இடம்பெற்றது.தன்போது ஆலயத்தில் இருந்து ஆரம்பமான கோபவனி யாழ் நகரைச் சுற்றி மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.

ஆலயத்தில் சிறப்புப் பூசைகள் இடம்பெற்று மாடுகளுக்கு உணவளிக்கப்பட்டது.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் , வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா. கஜதீபன், மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ப. தர்ஷானந்த் , யாழ்.மாநகர சபை ஆணையாளர் த. ஜெயசீலன் , மத குருமார்கள் மற்றும் சமய ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Exit mobile version