Site icon Tamil News

பிரான்ஸில் கடும் நெருக்கடி – 800 அரச இணையதளங்களில் சைபர் தாக்குதல்

பிரான்ஸில் கடந்த வாரத்தில் 800 வரையான அரச இணையத்தளங்களில் சைபர் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

பொது சேவைகளுக்கான அமைச்சர் Stanislas Guerini இதனை தெரிவித்தார். ‘எதிர்பார்க்கப்படாத மிகப்பெரிய அளவு தாக்குதல்’ என இதனை அவர் வர்ணித்துள்ளார்.

நாட்டில் கடந்த பல மாதங்களாக இந்த சைபர் இணைய தாக்குதல்கள் இடம்பெற்று வருகிறது. ‘

பிரான்ஸ் திறவாய் இணையத்தளம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு 40 மில்லியன் பேரின் தகவல்கள் கொள்ளையிடப்பட்டிருந்தன.

அதேபோல், மருத்துவ காப்பீடு நிறுவனங்களிலும் இதுபோன்ற சைபர் தாக்குதல்கள் பதிவாகியிருந்தன.

Exit mobile version