Site icon Tamil News

ஜனாதிபதி ரணிலுக்கு எதிராக குற்றப் பிரேரணையை கொண்டு வர முடியும் – சுனில் வட்டகல!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக குற்றப் பிரேரணையை கொண்டு வருவதற்கு தேவையான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு பணமில்லை என அரசாங்கம் கூறுவது பொய்யானது.  அதனை நிரூபிக்க ஆதாரங்கள் உள்ளன எனத் தெரிவித்துள்ள அவர், ஜனாதிபதிக்கு எதிராக பதவி நீக்கம் கொண்டு வர முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

திறைசேரி செயலாளரிடம் ஆவணம் ஒன்றைப் பெற்றுக்கொண்டதாகவும், அதன் படி கடந்த பெப்ரவரி மாதம் வரை 6000 கோடி ரூபா மேலதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது எனவம் சுனில் வட்டகல மேலும் கூறினார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு உண்மையில் ஏழு பில்லியன் ரூபாவே தேவைப்படுவதாகத் தெரிவித்த அவர், தேர்தலுக்கு ஜனாதிபதியிடம் பணம் இல்லை என்பது பொய்யானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version