Site icon Tamil News

மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் சூடானில் நடந்திருக்கலாம் – ஐ.நா

சூடானில் பொதுமக்களுக்கு எதிரான கண்மூடித்தனமான தாக்குதல்கள் “போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களாக” அமையலாம் என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.

சூடான் ஆயுதப் படைகளுக்கும் (SAF) துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகளுக்கும் (RSF) இடையே நடந்த போருக்கு மத்தியில் கிட்டத்தட்ட 25 மில்லியன் மக்கள், அதாவது சூடானின் மக்கள் தொகையில் பாதி பேருக்கு உதவி தேவை என்றும், சுமார் 8 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிவிட்டனர் என்றும் ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.

மனிதாபிமான உதவியை உறுதியளிக்க நன்கொடையாளர்கள் பாரிஸில் கூடினர்.

“இது இரண்டு போரிடும் கட்சிகளுக்கு இடையிலான மோதலை விட அதிகம். இது சூடான் மக்கள் மீது நடத்தப்படும் போர்,” என்று குட்டெரெஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதையும் 18 மில்லியன் மக்கள் “கடுமையான பட்டினியை” எதிர்கொள்வதையும் குறிப்பிடுகிறார்.

“பொதுமக்களை கொல்லும், காயப்படுத்தும் மற்றும் பயமுறுத்தும் கண்மூடித்தனமான தாக்குதல்கள் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகும்,” என்று அவர் கூறினார்.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை மற்றும் உதவி வாகனங்கள் மீதான தாக்குதல்களை கண்டனம் செய்தார்.

Exit mobile version