ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அறிக்கையொன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையைக் கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டிய அவர், அதற்கமைவாக, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்களைப் பயன்படுத்தி டெண்டனர் வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.