Site icon Tamil News

ஜெர்மனியில் மர்ம விமானம் தரையிறங்கியதால் குழப்பம்

முன் அறிவித்தல் இன்றி ஜெர்மனியின் விமான நிலையத்திற்கு தனியார் விமானம் ஒன்று திடீரென தரையிறங்கியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் அந்த விமானத்தில் அகதிகள் வந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பயன் மாநிலத்தில் அமைந்துள்ள விமான நிலையத்திற்கு ஒரு சிறிய விமானத்தில் விமான ஓட்டி 4 பேரை அழைத்து வந்துள்ளார்.

இந்த விமானமானது பல்கேரிய நாட்டில் இருந்து ஹங்கேரி நாட்டுக்கும் பொஷியா நாட்டுக்கும் பயணம் செய்து ஜெர்மன் நாட்டுக்கு வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிய விமானமானது இந்த விமான நிலையத்தில் தரித்த பொழுது முன் அறிவித்தல் எதுவும் அறிவிக்காமல் விமான நிலையத்தில் தரை இறங்கியுள்ளது.

குறித்த விமானி 4 ஈராக் நாட்டு அகதிகளை சட்ட விராதமான முறையில் ஜெர்மன் நாட்டுக்கு அழைத்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version