Site icon Tamil News

பிரித்தானிய விமான நிலையங்களில் அமுலுக்கு வந்த புதிய விதியால் குழப்பம்!

பிரித்தானியாவின் பர்மிங்காம் விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்புக் கட்டுப்பாடுகளால் மக்கள் பாதிக்கப்பட்டதாகவும், இதனால் விமான நிலையத்தில் குழப்பம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆயிரக்கணக்கான பயணிகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருந்ததாக பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பர்மிங்ஹாம் விமான நிலைய பயணிகள் விமான நிலையம் அதன் புத்தம் புதிய பாதுகாப்புச் சோதனைச் சாவடிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து உட்பிரவேசிக்க வேண்டிய கட்டாயத்தை கொண்டுள்ளது.

இதனால் பயணிகள் பல்வேற அசௌகரியங்களை எதிர்நோக்கியதாக தெரிவித்துள்ளனர். 200,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வரிசையில் நின்றதாக கூறப்படுகிறது.

விடுமுறையின் தொடக்கமே தடுமாற்றத்தை ஏற்படுத்தியதாக பயணிகள் குறை கூறியுள்ளனர்.

Exit mobile version