Site icon Tamil News

ஹபராதுவ பிரதேசத்தில் ரஷ்யர்கள் இடையே மோதல்

ஹபராதுவ, தல்பேயில் அமைந்துள்ள நிறுவனம் ஒன்றில் வைத்து ரஷ்ய பிரஜை ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் 4 ரஷ்ய பிரஜைகளை கைது செய்வதற்கான விசாரணைகளை ஹபராதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காயமடைந்த 39 வயதான ரஷ்ய பிரஜை காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்ய தேடப்பட்டு வரும் ரஷ்ய பிரஜைகள் நால்வரும், தாக்கப்பட்ட ரஷ்ய பிரஜையும் இலங்கை நாணயத்துக்கு ரஷ்ய ரூபிள் பரிமாற்றத்தில் ஈடுபட்டவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பணப்பரிவர்த்தனையின்போது ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதையடுத்து, இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இவர்களை தாக்கிய நான்கு ரஷ்யர்களும் பாதிக்கப்பட்டவரிடமிருந்த 3,800,000 ரூபாவை அபகரித்துச் சென்றதாக பொலிஸில் செய்த முறைப்பாட்டில் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

Exit mobile version